சங்கரராமனின் வழக்கறிஞரிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமனுக்காக ஒரு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அன்பழகனிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தினசரி பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அந்த வகையில் சங்கரராமனுக்கு கடந்த 1999ம் ஆண்டு ஒரு காசோலை மோசடி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அன்பழகன்என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். எஸ்.பி. பிரேம்குமார் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அன்பழகன் பேசுகையில்,
1999ல் இருசக்கர வாகன முகவருக்கு சங்கரராமன் ரூ.5,000க்கு காசோலை ஒன்றைக் கொடுத்தார். அது வங்கியில் பணம் இல்லாததால்திரும்பி வந்துவிட்டது. அது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சங்கரராமனுக்கு ஆதரவாக ஆஜரானேன்.
கடந்த 2001ம் ஆண்டு சங்கரராமன் தனது அம்மா இறந்த போது சங்கரமடத்திற்கு சென்றார். அப்போது மடத்திலிருந்தவர்கள் அவரைஅவமானப்படுத்தி வெளியேற்றினர். அதை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜெயேந்திரருக்கும் சங்கர மட மேலாளர்சுந்தரசே அய்யருக்கும் சங்கரராமன் சார்பில் நோட்டீஸ் அனுப்பினேன்.
ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தியாகராஜன் எனக்கு பதில் அனுப்பினார். அதில் சங்கரராமன் கூறிய சம்பவம் எதுவும் இங்குநடைபெறவில்லை. அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று கூறியிருந்தார்.
அதன்பிறகு நான் சங்கரராமனுக்காக வழக்கு தொடர விரும்பவில்லை. அவர் தொடர்ந்து வழக்கு தொடருமாறு வலியுறுத்தினார்.இருப்பினும் நான் வழக்கை தொடரவில்லை.
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதற்காக நான் மறுத்துவிட்டேன். இவற்றையெல்லாம் போலீஸாரிடம் நடந்தவிசாரணையில் தெரிவித்துள்ளேன் என்றார் அன்பழகன்.