சம்மன் வந்ததா?: சுகன்யாவின் தந்தை மறுப்பு
காஞ்சிபுரம்:
சங்கர மடத்துடன் இருக்கும் தொடர்பு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகை சுகன்யாவுக்கு சம்மன்அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அவரது தந்தை மறுத்துள்ளார்.
நேற்று முன்தினம் சொர்ணமால்யா காஞ்சிபுரம் போலீஸ் முன் ஆஜராகி சங்கரமடத்துடனான தனது தொடர்புகள் குறித்து விளக்கமளித்தார்.
இந் நிலையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகன்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.
விவாகரத்தான சுகன்யா சங்கர மடத்துடன் பக்தை என்ற அளவையும் தாண்டி அதிகமான நெருக்கம் காட்டியதாக கருதும் போலீஸார் இதுகுறித்து விசாரிக்க சுகன்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்பட்டது.
இதனை சுகன்யாவின் தந்தை மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
சுகன்யாவை விசாரணைக்கு வரச் சொல்லி எந்த சம்மனும் வரவில்லை. பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதுபோல் இந்தவிவகாரத்திற்கும் சுகன்யாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முன்பு பெயர் குறிப்பிடாமல் எழுதியவர்கள் இப்போது பகிரங்கமாகபெயரைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.
எனது மகளைப் பற்றி பொய்யாக எழுதி எங்களது குடும்ப நிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்றார்.
ஆனால், சுகன்யாவிற்கு சம்மன் அனுப்பப்படுவது உறுதி என்கிறது காவல்துறை வட்டாரம். இதே போல ஒளிமயமான நடிகையின் அக்காநடிகைக்கும் சம்மன் போகலாம் என்று தெரிகிறது. தமிழகத்தில் கொஞ்ச காலமே ஆட்டம்போட்ட அந்த நடிகை பின்னர் பஞ்சாயத்துநடிகரின் தொல்லை தாங்காமல் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார்.
இப்போது ஆன்மிகத்தில் திளைப்பதாகக் காட்டிக் கொண்டாலும், கோலிவுட்டில் இருந்த காலத்தில் அரசல் புரசல் சமாசாரங்களில் எல்லாம்இவரது பெயர் அடிபட்டது. அப்படித்தான் மடத்துடனும் இவரை லிங்க் செய்கிறார்கள். இதனால் இவரிடமும் விசாரணை நடக்கலாம்என்கிறார்கள்.
ஆந்திராவில் அப்பு பதுங்கியிருப்பதாகக் கருதப்பட்டதால் ரம்யமான ஒரு நடிகையின் வீட்டில் தனி போலீஸ் படை சோதனை நடத்தியதுகுறிப்பிடத்தக்கது. அந்த நடிகையும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications