அதிமுக எம்எல்ஏ மருமகன் கொலை: 4 பேர் கைது
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காங்கேயம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வி முருகேசனின் மருமகன் பெங்களூரில் கொலை செய்யப்பட்ட வழக்குதொடர்பாக 4 பேரை கர்நாடக போலீஸார் கொடுமுடியில் கைது செய்துள்ளனர்.
காங்கேயம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வி முருகேசனின் மகள் கவிதா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.அவரும், சிவக்குமார் என்பவரும் தீவிரமாக காதலித்தனர். இந்தக் காதலுக்கு செல்வி முருகேசன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி கல்யாணம் செய்து கொண்டு திருப்பூர்சென்று அங்கு வேலை பார்த்தனர். பின்னர் பெங்களூர் சென்ற அவர்கள் அங்கு வேலை பார்த்தனர்.
இந் நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி கவிதாவும், சிவக்குமாரும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அடையாளம்தெரியாத ஒரு கும்பல் அங்கு வந்து சிவக்குமாரை அடித்து வேனில் தூக்கிச் சென்றது.
அடுத்த நாள் சிவக்குமார் பெங்களூர்-ஓசூர் இடையே உள்ள அத்திபலே என்ற இடத்தில் படுகாயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இதைத்தொடர்ந்து செல்வி முருகேசன் உள்ளிட்டோர்தான் இதற்குக் காரணம் என்று கூறி சிவக்குமாரின் பெற்றோர் சண்முகம்-புஷ்பா போலீஸில்புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரின் பேரில் ஏற்கனவே கர்நாடகப் போலீஸால் செல்விமுருகேசன், அவரது கணவர் முருகேசன் உள்ளிட்டோரிடம் விசாரணைநடத்தியுள்ளனர். இந் நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நான்கு பேரை இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக போலீஸார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications