பெண் கற்பழிப்பு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 2003ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டில் தனியேஇருந்த பேச்சியம்மாள் என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்தார்.
தலைமறைவான ரமேஷை போலீஸார் கைது செய்து தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில் இன்று நீதிபதி ஜேக்கப்ஜெயக்குமார் தீர்ப்பு வழங்கினார்.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 1,000 அபராதம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதற்காக 10ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 2,000 அபராதம் என தண்டனை வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications