உச்ச நீதிமன்றத்தை நாடும் ஜெயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கோரியும் கிடைக்காத காரணத்தால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் டெல்லி விரைந்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன்மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது இன்று அல்லது சில தினங்களில் தெரிந்துவிடும்.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தை அணுகி ஜெயேந்திரர் தரப்பு முடிவு செய்துள்ளது.
சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் டெல்லி விரைந்துள்ளதாக ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கிருஷ்ணமணி கூறியுள்ளார். இன்றே உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications