ஜெயேந்திரரை சந்திக்க நீதிமன்றத்தை நாடும் விஎச்பி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரை சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக விஸ்வ இந்து பரிஷத்தலைவர் வேதாந்தம் மனு செய்துள்ளார்.
அந்த மனுவில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை சந்திக்க சென்றேன். ஆனால் என்னை அனுமதிக்க வேலூர் சிறைஅதிகாரிகள் மறுத்து விட்டனர்.
உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறிவிட்டனர். ஜெயேந்திரரை சந்திக்க எனக்கு அனுமதி வழங்க வேண்டும்என்று சிறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
நீதிபதி குலசேகரன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.
ஜெயேந்திரர் கைதுக்கு விஎச்பியும், இந்து முன்னணியும் அதிகமாக எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த இரு அமைப்பினரைச் சேர்ந்தவர்களைவேலூர் சிறைக்குள் போலீசார் அனுமதிக்க மறுத்துவிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications