லாரி- கார் மோதல்: 4 டாக்டர்கள் பலி
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே லாரி மீது மாருதி கார் மோதியதில் அதில் பயணம் செய்த 4 ஆயுர்வேத டாக்டர்கள்பரிதாபமாக பலியானார்கள்.
கோவையைச் சேர்ந்த 5 ஆயுர்வேத டாக்டர்கள் இன்று காலை மாருதி காரில் பெருந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.அவர்களது கார் பெருந்துறைக்கு அருகே உள்ள பள்ளக் கவுண்டன்பாளையம் என்ற இடத்தை நெருங்கியபோது காருக்கு முன் ஒருலாரி சென்று கொண்டிருந்தது.
வேகமாக சென்று கொண்டிருந்த லாரி, எதிரே, ஒரு வேன் விபத்துக்குள்ளாகி நிற்பதைப் பார்த்ததும், லாரியின் டிரைவர் திடீரெனவேகத்தைக் குறைத்துள்ளார். இதை எதிர்பார்க்காத மாருதி கார் லாரியின் பின்புறம் படு வேகத்தில் வந்து மோதியது.
இதில் கார் அப்பளமானது. காரில் பயணித்த 4 ஆயுர்வேத டாக்டர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப்பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார். அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications