2 பஸ்கள் மோதி வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் பேருந்து நிலையத்தில் இரண்டு நகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பஸ்சில் இருந்த வாலிபர் வெளியேதூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார்.
சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 10 மணிக்கு ஒரு பேருந்து வெளியே வந்தது. அப்போது வேறு ஒருநகரப் பேருந்து வேகமாக உள்ளே நுழைந்தது.
இரு பேருந்துகளும் பேருந்து நிலைய வாசலிலேயே படு வேகமாக மோதிக் கொண்டன. இதில் பேருந்து நிலையத்திலிருந்துவெளியேறிய பஸ்சில் அமர்ந்திருந்த ரஞ்சித் என்ற வாலிபர் வெளியே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயேபலியானார்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் அடிக்கடி பேருந்துகள் மோதிக் கொள்வதும், பயணிகள் காயமடைவதும் அதிகரித்துவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நேரத்தில் தற்போது அப்பாவி பயணி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.












Click it and Unblock the Notifications