ஜெயேந்திரர் உடல் நலம்: வதந்தி- பரபரப்பு
வேலூர்:
ஜெயேந்திரர் உடல் நலம் குறித்து வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் வதந்தி பரவியது. இதையடுத்து வதந்தியை நிறுத்தும் பொருட்டுஉயர் மட்ட மருத்துவர் குழு ஜெயேந்திரர் உடல் நிலையைப் பரிசோதனை செய்தது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மாரடைப்புஏற்பட்டுள்ளதாகவும் வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் வதந்தி பரவியது.
இதையடுத்து வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பி.சண்கமும், துணை இயக்குனர் டாக்டர்புருஷோத்தம விஜயக்குமார், இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் திருமால் பாபு ஆகியோர் கொண்ட உயர் மட்ட மருத்துவக்குழு வேலூர் சிறைக்கு விரைந்தது.
ஜெயேந்திரரை அவர்கள் முழுமையாக பரிசோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரப் பரிசோதனைக்குப் பின் 3 பேரும்வெளியே வந்தனர்.
அவர்களை சூழ்ந்த செய்தியாளர்களிடம், ஜெயேந்திரர் நலமுடன்தான் உள்ளார். அவரைப் பற்றிய வதந்தியில் உண்மை ஏதும்இல்லை என்றனர்.
அவர்கள் சென்ற பின்னர் சிறிது நேரத்தில், ஜெயேந்திரரின் உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக சங்கர மட டாக்டர்ராமச்சந்திரன் வந்தார். ஜெயேந்திரரை பார்த்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications