ஜெ. சொத்து குவிப்பு: அடுத்த மாதம் விசாரணை
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் அடுத்த மாதம் தொடங்கும் என்று சிறப்புநீதிமன்ற நீதிபதி பச்சேபுரா கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்த வழக்கு சரிவர விசாரிக்கப்படாததாலும், விசாரணையில் அரசு தலையிட்டதாலும் இதனை பெங்களூருக்குமாற்றியது உச்ச நீதிமன்றம்.
சுமார் 8,000 பக்கங்கள் கொண்ட இந்த வழக்கு ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டுவருகின்றன. இந்தப் பணியில் 20ம் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மொழியாக்கப் பணி அடுத்த மாதம் முடிவடையும் என்று தெரிகிறது. இதையடுத்து உடனடியாக விசாரணைதொடங்கப்படும் என நீதிபதி பச்சேபுரா கூறினார்.
விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைதினந்தோறும் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் இந்த வழக்கு விசாரணைகளில் முதல்வர் ஜெயலலிதா தினமும் ஆஜராக வேண்டிய அவசியமும் ஏற்படலாம் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications