ராஜிவ் கொலையில் சந்திரா சாமிக்கு நேரடி தொடர்பு
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் சந்திரா சாமிக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு சந்திரா சாமி மீது நெடுங்காலத்துக்கு முன்பே கூறப்பட்டது. ஆனால் இந்தக் கோணத்தில் முழு விசாரணைஏதும் நடக்கவில்லை.
சந்திரா சாமி மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வெளிநாட்டில் வாழும் தனது பக்தர்களை சந்தித்து சொற்பொழிவாற்றச் செல்ல அனுமதிக்க்க கோரி சந்திரா சாமிடெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சிபிஐ தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ராஜிவ் காந்தி கொலையில் அன்னிய சதி குறித்து பல்நோக்குக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளில்ராஜிவ் கொலைக்கு நிதியுதவி செய்தவர் சந்திரா சாமி என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த முழுமையாக விசாரணை நடந்து வருகிறது. இதில், இந்தக் கொலைக்காக புலிகளுக்கு சந்திரா சாமி நிதியுதவிசெய்துள்ளார். சந்திரா சாமியின் பண பரிமாற்றங்கள் குறித்து 23 நாடுகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஆனால், 5 நாடுகள்மட்டுமே பதில் தந்துள்ளன.
இந்த விசாரணைகள் தொடர்வதால் சந்திரா சாமியை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று சிபிஐ கூறியுள்ளது.
ராஜிவ் கொலையில் சந்திரா சாமியை நேரடியாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
39 நாளில் டேவிட்சன் மாற்றம்! புதிய டிஜிபியான சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்! சந்தீப் மிட்டல் யார்? -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! பள்ளிகள் எப்போது தொடக்கம்? விவரம் -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம்












Click it and Unblock the Notifications