For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவ் கொலையில் சந்திரா சாமிக்கு நேரடி தொடர்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் சந்திரா சாமிக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு சந்திரா சாமி மீது நெடுங்காலத்துக்கு முன்பே கூறப்பட்டது. ஆனால் இந்தக் கோணத்தில் முழு விசாரணைஏதும் நடக்கவில்லை.

சந்திரா சாமி மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வெளிநாட்டில் வாழும் தனது பக்தர்களை சந்தித்து சொற்பொழிவாற்றச் செல்ல அனுமதிக்க்க கோரி சந்திரா சாமிடெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சிபிஐ தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ராஜிவ் காந்தி கொலையில் அன்னிய சதி குறித்து பல்நோக்குக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளில்ராஜிவ் கொலைக்கு நிதியுதவி செய்தவர் சந்திரா சாமி என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்த முழுமையாக விசாரணை நடந்து வருகிறது. இதில், இந்தக் கொலைக்காக புலிகளுக்கு சந்திரா சாமி நிதியுதவிசெய்துள்ளார். சந்திரா சாமியின் பண பரிமாற்றங்கள் குறித்து 23 நாடுகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஆனால், 5 நாடுகள்மட்டுமே பதில் தந்துள்ளன.

இந்த விசாரணைகள் தொடர்வதால் சந்திரா சாமியை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று சிபிஐ கூறியுள்ளது.

ராஜிவ் கொலையில் சந்திரா சாமியை நேரடியாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X