For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாமியார்கள் கைது: மனம் வெறுத்து தற்கொலை செய்த சென்னை சாமியார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எங்கு பார்த்தாலும் சாமியார்கள் கைது செய்யப்பட்டு வருவதால் மனம் வெறுத்துப் போன சென்னையைச் சேர்ந்த ஒரு சாமியார்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சிவயோகி சிவனடியார் சுவாமி என்ற சாமியார் இருந்தார். அவருக்கு வயது 45. அந்தப்பகுதியில் இவர் ஒரு கோவிலை நிறுவி அங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.

இந் நிலையில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,தினசரி அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் சாமியார் எழுந்து விடுவார். ஆனால் நேற்று காலை 9 மணி ஆகியும், சாமியார் இருந்தஅறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து பால் போட வந்த பெண் எங்களிடம் கூறினார். அனைவரும் சேர்ந்து கதவைத் தட்டிப் பார்த்தோம். ஆனால் பதிலேவரவில்லை. இதையடுத்து போலீஸுக்குத தகவல் கொடுத்தோம்.

போலீஸார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தனது காவித் துண்டால் சாமியார் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார் என்றார்.

அய்யனார் என்பவர் கூறுகையில், இவர் மிகவும் நல்ல சாமியார். சமீப காலமாக ஜெயேந்திரர், சதுர்வேதி என பல சாமியார்கள்பல்வேறு புகார்களில் கைது செய்யப்பட்டு வருவதை வைத்து இப்பகுதியைச் சேர்ந்த சிலர் சிவனடியார் சுவாமியிடம் கேலிசெய்வர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த கேலி கிண்டலால் வெறுத்துப் போன அவர் தனது அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. பக்தர்களுக்கு மட்டும்ஆசி வழங்கி வந்தார். தினசரி அன்னதானம் செய்யும் பழக்கம் இவரிடம் உண்டு. பக்தர்கள் கொடுக்கும் பழம், டீ, பிஸ்கட்போன்றவற்றை மட்டுமே இவர் சாப்பிடுவார். அரிசி சாதம் கூட சாப்பிட மாட்டார் என்றார்.

சாமியார் குறித்து அப்பகுதி மக்கள் நல்ல கருத்தையே தெரிவிப்பதால், உள்ளூர் வாலிபர்கள் சிலரின் கேலியால்தான் சாமியார்தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று போலீஸார் கருதுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X