ஜெயலட்சுமி: 7 போலீஸார் டிஸ்மிஸ்?
மதுரை:
ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் எஸ்.பி. உட்பட 7 போலீஸாரை டிஸ்மிஸ் செய்ய காவல்துறையின் உயர்அதிகாரி ஒருவர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந் நிலையில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருஎஸ்.பி., ஒரு டி.எஸ்.பி., 4 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரை பணிநீக்கம் செய்யபரிந்துரைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில், தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன், 14 போலீஸ் அதிகாரிகளை பதவியிறக்கம் அல்லது முக்கியமில்லாத துறைகளுக்குஇடமாற்றம் செய்யவோ பரிந்துரைத்துள்ளார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர்கள் புரிந்த குற்றங்களின் அடிப்படையில் ஊதிய உயர்வை இரண்டு வருடங்களுக்கு அல்லது நிரந்தரமாக ரத்து செய்யஅரசுக்கு பரிந்துரைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் துறை ரீதியான விசாரணை முடிந்து, அறிக்கை டிஜிபியிடம் சமர்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications