அப்புவின் தாயாரிடம் விசாரணை
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள அப்புவின் தாயார் ஆதிலட்சுமியிடம் காஞ்சிபுரம் போலீஸார் தீவிரவிசாரணை நடத்தியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தீவிரதேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள அவர்கள் அப்புவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் தற்போது தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்புவின் மாமா செங்கல்வராய ரெட்டி, அவரது மகள், மகன் ஆகியோரிடம் சமீபத்தில் ஆந்திராவில் வைத்து போலீஸார்விசாரணை நடத்தினர். இதில் அப்புவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்து பல தகவல்கள் கிடைத்தன.
இந் நிலையில் சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் அப்புவின் தாயார் ஆதிலட்சுமியிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார்தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 3 மணி நேரம் நடந்த ரகசிய விசாரணையின்போது அப்பு குறித்த பல தகவல்கள்கிடைத்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் அப்பு தற்போது எங்கே இருக்கிறான் என்பது குறித்து தனக்கு எதுவுதம் தெரியாது என்று போலீஸாரிடம்ஆதிலட்சுமி தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.