ஜெயேந்திரர்: விரைவில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு
வேலூர்:
ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கே.எஸ்.தினகர் வேலூர் சிறையில் ஜெயேந்திரரை சந்தித்து உச்ச நீதிமன்றத்தில்ஜாமீன் மனு தாக்கல் செய்வது தொடர்பாக பேசினார். ஒரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர்தெரிவித்தார்.
இதுகுறித்து பின்னர் தினகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது வழக்கமான சந்திப்புதான். சிறையில்ஜெயேந்திரர் நன்றாக கவனிக்கப்படுகிறார். மிகவும் புத்துணர்ச்சியுடன் சங்கராச்சாரியார் உள்ளார்.
வழக்கு குறித்தும், உச்ச நீதிமன்றத்தில ஜாமீன் மனு தாக்கல் செய்வது தொடர்பாகவும் ஜெயேந்திரருடன்பேசினேன். உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு ஏற்கனவே அவரிடம் அனுமதி வாங்கி விட்டேன்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் அதை எதிர்த்துஉயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். அந்த வழக்கை நானும், வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியமும்கையாளுவோம்.
ஜெயேந்திரர் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும் அவற்றை சந்திப்போம். ஆத்ம ரீதியில் விஜயேந்திரரின்மனதில் ஜெயேந்திரர் இருக்கிறார். எனவே அவரைச் சந்திக்க வேலூர் சிறை வர வேண்டிய அவசியம்விஜயேந்திரருக்கு இல்லை.
வழக்கறிஞர் கிருஷ்ணமணி, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்வார். இன்னும் ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications