அத்வானி, உமாவுக்கு வாசன் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayendrarசங்கராச்சாரியார் விஷயத்தில் அரசியலில் மதத்தைப் புகுந்தி ஆதாயம் தேட பாஜக முயல்வதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன்கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆர்.எஸ்.எஸ். என்பது மதசார்பற்ற அமைப்பு என்று முன்னாள் பிரதமர் அத்வானி கூறியிருக்கிறார்.

பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா?. ஆர்.எஸ்.எஸ். என்பது மதவெறி பிடித்த நச்சு இயக்கம் என்பதை மறைக்க அத்வானிமுயல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் செயல் இல்லையா?

மகாத்மா காந்தியை கொலை செய்ததே ஆர்எஸ்எஸ்சைச் சேர்ந்த கோட்சே தானே. இதை அத்வானி மறுக்க முடியுமா?

அரசியலில் மதத்தைப் புகுந்தி ஆதாயம் தேட முயலும் பாஜகவின் தலைவரான அத்வானி, சங்கராச்சாரியார் விஷயத்திலும் இதேவேலையைச் செய்ய முயல்கிறார். ஆனால், இந்த முயற்சிகள் மக்களிடம் எடுபடாது என்று கூறியுள்ளார் வாசன்.

இதே போல சங்கராச்சாரியாரை விடுதலை செய்யக் கோரி விஸ்வ இந்து பரிஷத் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை உமா பாரதி வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்.

உண்மைக்குப் புறம்பான பொய்களை புழுதி வாரி தூற்றுவது போல வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்.

சங்கராச்சாரியாரை நல்லபடியாக நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிய கடிதம் கூட வெறும்கண்துடைப்பு என்கிறார். உமா பாரதியின் இந்தப் பேச்சுக்கள் அவரது அரசியல் அறியாமையைத் தான் காட்டுகின்றன.

இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+