For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி குற்றவாளிகள் 5 பேரின் காவல் நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Sankararamanசங்கரராமன் கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த போலி குற்றவாளிகள் 5 பேரின் சிறைக் காவல் மேலும் 2 வாரத்திற்குநீட்டிக்கப்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்பு சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில்ஆறுமுகம், சதீஷ், தில் பாண்டியன், தேவராஜ் உள்ளிட்ட 5 பேர் தாங்கள்தான் கொலையைச் செய்தது என்று கூறி சரணடைந்தார்கள்.

விசாரணையில் அவர்கள் போலி குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. இவர்களும் தற்போது சங்கரராமன் கொலை வழக்கில்சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.

இதைத் தொடர்ந்து 5 பேரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது சிறைக் காவலைவருகிற 27ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X