ஜெயேந்திரர் வழக்கை மாற்றக் கூடாது: சங்கரய்யா
வேலூர்:
காஞ்சி சங்கராச்சாரியாரின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் சங்கரய்யா கோரியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயேந்திரர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டியஅவசியம் இல்லை. நாட்டின் சட்ட அமைப்பில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக தமிழக நீதிமன்றங்கள்மீது அதிக நம்பிக்கை உள்ளது.
இந்தப் பிரச்சினையை அரசியலாக்க பாஜக முயலுகிறது. இதன் மூலம் இழந்த தனது செல்வாக்கை மீண்டும்பெறலாம் என அது நப்பாசைப் படுகிறது.
ஜெயேந்திரர் கைதால் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் பாஜக கூறுவதில்சற்றும் உண்மையில்லை. இந்துக்கள் அனைவரும் ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் என்பது போல காட்ட பாஜகமுயலுகிறது.
இது சட்டப்பூர்வமான ஒரு நடவடிக்கை. இப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இனிமேல்நீதிமன்றம்தான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications