எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு நாடாளுமன்றம் அஞ்சலி
டெல்லி:
மறைந்த இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கு நாடாளுமன்றம் இன்று தனது அஞ்சலியையும் மரியாதையையும்செலுத்தியது.
3 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 9 பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், எம்.எஸ்சுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
மக்களவையில் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையிலும், மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி பைரேன்ைசிங்ஷெகாவத் தலைமையிலும் உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சாட்டர்ஜி பேசுகையில், எம்.எஸ்சின் மறைவால் இந்திய இசை உலகில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அதைநிரப்புவது மிகக் கடினம். அந்த மகா மேதை மறைந்துவிட்டாலும் அவரது குரல் நம்மை எப்போதும் போல இசையில்மூழ்கடிக்கும் என்றார்.
ஷெகாவத் பேசுகையில், எளிமைக்குப் பெயர் போனவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இசையால் பக்தியைப் பரப்பிய மேதை. 1966ம்ஆண்டில் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலகின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியவர் என்றார்.