For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பொடா மறு ஆய்வு குழு விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் போடப்பட்டுள்ள பொடா வழக்குகள் நியாயமான காரணங்களுக்காகத்தான் போடப்பட்டுள்ளனவா என்பது குறித்துபொடா மறு ஆய்வுக் குழு இன்று முதல் விசாரணை நடத்தவுள்ளது.

சர்ச்சைக்குரிய பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் நாடு முழுவதும் பொடா சட்டத்தின் கீழ்தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள், நியாயமானவை தானா, பொடா சட்டத்தின் கீழ் அவை வருமா என்பது குறித்து ஆய்வு செய்யபொடா மறு ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் பொடா மறு ஆய்வுக் குழுத் தலைவர் நீதிபதி உஷா மெஹ்ரா தலைமையிலான 3 பேர் குழு (ஓய்வு பெற்றஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்பால், முன்னாள் டிஜிபி ஜா ஆகியோர் மற்ற இருவர்) சென்னை வந்துள்ளது.

தர்மபுரியில் 26 நக்சலைட்டுகள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து இன்று ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. நாளை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக நெடுமாறன் நீதிபதி குழு முன்பு ஆஜராகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X