நீதிமன்றத்தில் சங்கரராமன் வழக்கறிஞர் வாக்குமூலம்
Subscribe to Oneindia Tamil
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் நீதிமன்றத்தில் சங்கரராமனின் வழக்கறிஞர் அன்பழகன் இன்று வாக்குமூலம் கொடுத்தார்.
சங்கரராமனுக்கு முன்பு வழக்கறிஞராக இருந்தவர் அன்பழகன். சங்கர மடம் தொடர்பான சில பிரச்சினைகளின்போது சங்கரராமனுக்காகவக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர் இவர்.
சங்கரராமன் கொலை வழக்கில் இவரும் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரிடம் காஞ்சிபுரம் போலீஸார் ஏற்கனவே விசாரணைநடத்தியுள்ளனர். இந் நிலையில் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் நீதிபதி ராமஜெயம் முன்பு அன்பழகன் இன்று வாக்குமூலம் அளித்தார்.












Click it and Unblock the Notifications