சொர்ணமால்யா: சிக்கலில் இளையவர்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Swarnamalyaகாஞ்சி மடத்திற்கு வெளியே விஜயேந்திரரை பலமுறை சந்தித்ததாக போலீஸ் விசாரணையின் போது சொர்ணமால்யாகூறியுள்ளதாகத் தெரிகிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதிலிருந்து விஜயேந்திரரிடம் போலீஸார் விசாரணை எதுவும்நடத்தவில்லை. இந் நிலையில் போலீஸ் விசாரணையின்போது விஜயேந்திரரைப் பற்றி சொர்ணமால்யா பல திடுக்கிடும்தகவல்களைக் கூறியிருப்பது தெரியவந்ததுள்ளது.

கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் நடந்த விசாரணையின்போது போலீசாரிடம் சொர்ணமால்யா கூறிய தகவல்கள் இளைவரைபிரச்சனையில் சிக்க வைக்கும் ரகத்தில் இருந்துள்ளன.

சின்ன வயதிலிருந்தே மடத்திற்கு செல்லும் பழக்கம் உடைய சொர்ணமால்யா ஜெயேந்திரரை இரண்டே இரண்டு முறைதான்பார்த்திருக்கிறாராம். விஜயேந்திரரைத் தான் அடிக்கடி பார்ப்பாராம்.

டிவியில் பிரபலமான பின்பு, மடத்திற்கு செல்வதைக் குறைத்துக் கொண்ட சொர்ணமால்யா , வெளியிடங்களில் விஜயேந்திரரைச்சந்தித்து ஆசிர்வாதம் வாங்கத் தொடங்கியிருக்கிறார்.

இந்தத் தகவல்கள் குறித்து போலீசார் கேள்வி கேட்கையில் முதலில் பதில் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார் சொர்ணா. ஆனால்,விஜயேந்திரர்-சொர்ணமால்யா சந்திப்பு நடந்த இடம், நேரம் உள்ளிட்டவற்றை போலீசாரே குறிப்பிட்டு கிடுக்கிப்படி கேள்விகள்போட, நெளிந்தபடியே எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறார்.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அடிக்கடி விஜயேந்திரரை சந்தித்திருக்கிறார். அதேபோல் பொன்பாடி ஆசிரமத்திற்குவிஜயேந்திரர் வந்திருந்தபோது இரண்டு, மூன்று முறை போய் சந்தித்திருக்கிறார் சொர்ணமால்யா.

அதுமட்டுமல்லாமல் விஜயேந்திரருடன் சொர்ணாமால்யா அடிக்கடி தொபைேசியிலும் பேசியிருக்கிறார். தொடர்புகொள்ளும்போது உடனே விஜயேந்திரர் எடுக்க மாட்டார் என்றும், போனை எடுத்ததும் வேறு எண் கொடுத்து அதில் பேசச்சொல்வார் என்றும் போலீசிடம் கூறியிருக்கிறார் சொர்ணமால்யா.

Vijeyendrarஇவ்வாறு விஜயேந்திரருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவது கல்யாணம் ஆனபின்பும் தொடர்ந்திருக்கிறது. அதன் பின்பேஅவரது கணவர் சந்தேகப்பட்டு விவகாரரத்து வரை போனார் என்றும் கூறுகின்றனர்.

இந்த சொர்ணமால்யா- விஜயேந்திரர் சங்காத்தம் குறித்தும் சங்கரராமன் தனது கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கொலையான நிலையில், சொர்ணமால்யாவின் இந்த வாக்குமூலம் விஜயேந்திரருக்கு எதிராக அமைந்துள்ளது. எனவே விரைவில்அவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சங்கர மடத்தின் எதிரே வீடியோ கடை வைத்திருக்கும் சத்யாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது,பூக்கூடையில் மறைத்து வைத்து விஜயேந்திரருக்கு விசிடிக்கள் வினியோகம் செய்ததை அவர் ஒத்துக் கொண்டது நினைவுகூறத்தக்கது.

இப்போது விஜயேந்திரரின் தம்பி ரகுவிடம் கடும் விசாரணை நடந்து வருகிறது. அடுத்ததாக விஜயேந்திரரும் விசாரணைவளையத்துக்குள் வர வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+