அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு: விஜய டி.ஆர்.
கோயம்புத்தூர்:
வருகிற தேர்தலில் தேவைப்பட்டால் அதிமுகவுடன் லட்சிய திமுக கூட்டணி அமைக்கும் என்று அக் கட்சியின் தலைவரும், சினிமாஇயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
கோவை ராஜ வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
திமுகவில் எம்ஜிஆரை எதிர்த்து 7 ஆண்டுகள் குரல் கொடுத்தேன். எம்ஜிஆர் மறைந்த பிறகு எனது உழைப்பை மறந்துகட்சியிலிருந்து நீக்கினார்கள். அதனால் தாயக மறுமலர்ச்சி கழகத்தைத் தொடங்கினேன்.
திமுகவிலிருந்து வைகோ விலகி, மதிமுகவைத் தொடங்கியபோது கட்சியில் சரிவு ஏற்பட்டது. அப்போது மீண்டும் என்னைதிமுகவில் இணையும்படி அழைத்தார்கள். அதன்பின்பு 7 ஆண்டுகள் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றினேன்.
கடந்த மக்களவைத் தேர்தலில் 7 கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டபோது, நான் வேப்பிலையாக கசந்துபோனேன். மீண்டும்என்னைக் கைவிட்டனர்.
திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினுக்கும், மத்திய அமைச்சர் தயாநிதிக்கும் அதிக முக்கியத்துவம்கொடுக்கப்படுகிறது.
என் பின்னால் இளைஞர் படை உள்ளது. திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க நாங்கள் பாடுபடுவோம்.தேவைப்படின் அதிமுகவுடனும் கூட்டணி அமைப்போம் என்று பேசினார்.