வி.எச்.பி. இன்று ஆர்ப்பாட்டம்
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தென் மாநிலங்களில் இன்று விசுவ இந்து பரிஷத்அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மூத்த தலைவர் கிரிராஜ் கிஷோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதையும் சிறையில் அவர் நடத்தப்படும் விதத்தையும் கண்டித்து தென் மாநிலங்களில் விசுவஇந்து பரிஷத் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
அமைப்பின் தொண்டர்கள் மஞ்சள் நிற பேட்ஜ் அணிந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து 2-வது கட்ட போராட்டத்தை நடத்த விசுவ இந்து பரிஷத் தயாராகி வருகிறது. அதை எப்படிநடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
வருகிற 29-ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரோதக் நகரில் நடைபெறும் விசுவஇந்து பரிஷத்தின் செயற்குழு கூட்டத்தில்ஜெயேந்திரர் கைது பற்றி விவாதிக்கப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பீகார், ஜார்கண்ட், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு அரசியல் கட்சிதொடங்குவது குறித்து விசுவ இந்து பரிஷத் முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.