சுந்தரேச அய்யரிடம் மீண்டும் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யரிடம் மீண்டும் 3 மணி நேரம் தனிப்படை போலீஸார்விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம் வன இலாகாவுக்குச் சொந்தமான காட்டு பங்களாவில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை இந்த விசாரணை நடந்தது. 10நாட்களுக்கு முன் இந்த பங்களாவை விசாரணைக்காக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தவுடன் விசாரிக்கப்பட்ட முதல் நபரும்சுந்தரேச அய்யர் தான்.
இப்போது 9வது முறையாக விசாரிக்கப்பட்டுள்ளார் அய்யர். மடத்தின் நிதி விவரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் அய்யர் தான்என்பதால், கொலையாளிகளுக்குப் போன மடத்தின் பணம் குறித்து அவர் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார் என போலீசார்கூறுகின்றனர்.
விசாரணைக்கு சுந்தரேச அய்யருடன் காஞ்சி மடத்தின் கணக்காளர் விஸ்வநாதன் மற்றும் சங்கரா கல்லூரி முதல்வர் வெங்கடேசன்ஆகியோர் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications