சென்னையில் ரூ. 200 கோடியில் புதிய பாலங்கள்
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.200 கோடி செலவில் புதிய பாலங்கள் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவுசெய்துள்ளது.
கோயம்பேடு புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டதில் இருந்து கத்திப்பாரா சந்திப்பு, பாடி சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்துநெரிசல் அதிகரித்துள்ளது.
நெருக்கடி மிகுந்த வேளைகளில் இந்த பகுதியில் 20,000 வாகனங்கள் வரை செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கத்திப்பாரா, கோயம்பேடு, பாடி சந்திப்பு மற்றும் சென்னை விமான நிலையம் எதிரே உள்ளசாலை ஆகியவற்றில் பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே 1 கி.மீ. தூரத்துக்கு பெரிய மேம்பாலம் ஒன்று கட்டப்படும். 2 ஆண்டுகளில் இத் திட்டப் பணிகள்அனைத்தும் முடிக்கப்படும். இந்த பணிகளை வரும் பிப்ரவரியில் துவக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
மத்திய நெடுசாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் முயற்சியால் இந்தத் திட்டங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்படுகின்றன.