தினகரன்: மோசடி வழக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் சசிகலாவின் சகோதரருமான தினகரன் மீதான அன்னியச் செலவாணி மோசடி வழக்கு விசாரணைஅடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தது.

இந் நிலையில் நீதிபதி சதாசிவம், நீதிபதி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வி.டி.கோபாலன் மற்றும் வில்சன் ஆகியோர், தினகரனுக்குவிதிக்கப்பட்ட அபராதம் நியாயமானது. எனவே அதை ரத்து செய்யக் கூடாது என்றனர்.

தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குமார் மற்றும் ஜீவசேனன், விரிவாக வாதாடுவதற்கு கால அவகாசம் கேட்டனர். இதையடுத்துவழக்கை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய நிதியமைச்சகத்தின் அனுமதியில்லாமல் வெளிநாடுகளில் தினகரன் கோடிக்கணக்கில் முதலீடு செய்ததையடுத்து இந்த அன்னியசெலாவணி மோசடி வழக்குப் பதிவானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+