For Daily Alerts
Just In
சிறையில் சலுகை?: அரசு எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் சிறையில் ஜெயேந்திரருக்கு, சட்டத்திற்குப் புறம்பாக எந்தவித சலுகையும் தரப்படவில்லை என்று வேலூர் சிறைக் கண்காணிப்பாளர்ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
வேலூர் சிறையில் ஜெயேந்திரருக்கு சிறை விதிகளை மீறி சில சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக உண்மை இருந்தால்உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அரசு வழக்கறிஞர் துரைசாமி, ராமச்சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதற்கு ராமச்சந்திரன் அனுப்பியுள்ள பதிலில், சிறை நடைமுறை விதிகளுக்கு மட்டும் உட்பட்டு ஜெயேந்திரர் சிறையில் நடத்தப்படுகிறார்.விதிமுறைகளை மீறி அவருக்கு சிறப்பு சலுகைகள் எதையும் சிறை நிர்வாகம் தரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, December 15, 2004, 5:30 [IST]