For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் என்ன சொன்னேன்: கருணாநிதி விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Karunanidhi சங்கர மடத்தை அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

சங்கர மடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறியதாக சிலர் தவறாக கூறி வருகிறார்கள். பழம் பெரும்பத்திரிகைகள் இப்படிப்பட்ட தவறான பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. சங்கர மடத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுநான் கூறியதாக வெளியான செய்தி இட்டுக் கட்டி எழுதப்பட்ட செய்தி.

அரசாங்கம் நினைத்தால் ஆன்மீகவாதிகளை அழைத்துப் பேசி முடிவு செய்யலாம். எனக்குள்ள கவலையெல்லாம் அந்த நிறுவனம் ஒழுங்காகநடைபெற வேண்டும். அதற்காக அந்த நிறுவனத்தின் கொள்கை, கோட்பாடுகளில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது என்பதல்ல. அதுவேறு விஷயம்.

அடிப்படையில் நாங்கள் வேறு, அவர்கள் வேறு. ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு, மாணவர்களுக்கு ஒரு நிறுவனத்தின் சார்பாகஉதவிகளைச் செய்யக் கூடிய நிலை ஏற்படுமானால், அதைத் தொடருவதற்கான முயற்சிகளில் அந்த நிறுவனத்தை அழித்து விடாமல்பாதுகாப்பதில் அரசும், அறநிலையத் துறையும் ஒன்று கூடி யோசித்து ஆவன செய்யலாம்.

இதைத்தான் நான் சொன்னேன், இப்போதும் அதைத்தான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X