கிருஷ்ணகிரியில் ஜெ. ரூ.99 கோடி நல உதவி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ரூ.99 கோடி மதிப்பிலான நலத் திட்டப்பணிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந் நிலையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில்புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம்திருச்சியிலிருந்து கிருஷ்ணகிரி வந்தார். அடிக்கல் நாட்டிய பின்பு ரூ. 99 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.இதன்மூலம் 10,754 பேர் பயனடைவார்கள்.
மேலும் ஓசூர் முதல் சர்வதேச மலர் காட்சியைத் தொடங்கிவைத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் மலர் உற்பத்தியாளர்களுடன் ஜெயலலிதாகலந்து உரையாடினார்.
விழாவின்போது பந்தல் நிரம்பி வந்தது. ஆயிரக்கணக்கானோர் பந்தலுக்கு வெளியேயும் கூடியிருந்தனர். ஜெயலலிதா வருகையையொட்டிபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.