மியூசிக் அகாடமியில் கச்சேரிகள் நடத்த அனுமதி
சென்னை:
சென்னை மியூசிக் அகாடமியில் இசைக் கச்சேரிகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை மியூசிக் அகாடமியில் பெரிய அளவில் ஊழல்களும், முறைகேடுகளும், நிதி சீர்கேடும் நடந்ததால் நிர்வாக செயல்பாட்டுக்குதமிழக பதிவுத்துறை ஐ.ஜி. தடை விதித்தார்.
இதை எதிர்த்து மியூசிக் அகாடமியின் சார்பில் அதன் செயல் அறங்காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்தமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மியூசிக் அகாடமியின் செயல்பட்டுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்றும் நீதிபதி சதாசிவம்உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச் முன்பு மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி கட்ஜு,நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியம் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர் மறு உத்தரவு வரும் வரை தற்பேதைய நிர்வாகக் குழுவினரே தொடர்ந்து அகாடமியை நிர்வகிக்கலாம். இசைக் கச்சேரிகள்நடத்தலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications