காஞ்சி நோக்கி மடாதிபதிகள் மகா யாத்திரை
நகரி:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை உடனடியாக விடுவிக்க கோரிமகாயாத்திரையை நாளை மடாதிபதிகள் தொடங்குகிறார்கள்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள தர்மரட்ச சம்யுக்த சங்கர்சனா சமிதி செயலாளர் ஷியாம் பிரசாத் முகர்ஜி கொண்ட, குண்டூரில் உள்ளபிரம்ம வித்ய ஆஸ்ரம் பீடாதிபதி சமரச ஆனந்தசாமி, விபாக்தர்மாச்சாரியர் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயேந்திரரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி நாளை விசாகப்பட்டினத்தில் இருந்து மகா யாத்திரை தொடங்கப்படுகிறது. இதில்தென்னிந்தியாவில் உள்ள அத்தனை பீடாதிபதிகளும், சீடர்களும் கலந்து கொள்கிறார்கள். யாத்திரையில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.
யாத்திரையின்போது ஒவ்வொரு கிராமத்திலும் ஜெயேந்திரர் கைது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். யாத்திரை 26ம் தேதிகாஞ்சிபுரம் சென்றடையும். அதே தேதியில் அங்கு பொதுக்கூட்டம் நடத்துப்படும். இதற்கான ஏற்பாடுகளை சங் பரிவார் அமைப்பு செய்துவருகிறது என்று கூறினார்கள்.
இந்த யாத்திரையை முன்னிட்டு ஆந்திர போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.