2.2 கோடி பேருக்கு இலவச பொங்கல் வேஷ்டி, சேலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி 2.22 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை கொடுக்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் மாநில கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், வறுமைக் கோட்டிற்குக்கீழே உள்ள குடும்பத்தினருக்கு பொங்கல் நாளையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டு 2.22 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது. இதில் 1.11 கோடி பேருக்கு வேட்டியும், 1.11கோடி பேருக்கு சேலையும் கொடுக்கப்படும்.
பொங்கலுக்கு முன்பாகவே இந்த வேட்டி, சேலைகள் கொடுக்கப்பட்டு விடும். ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் விநியோகம் தொடங்கும்.வேட்டி, சேலைகள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும்.












Click it and Unblock the Notifications