"ஆசை" பாணியில் ஒரு தற்கொலை
சென்னை:
ஆசை படத்தில் வருவது போல பிளாஸ்டிக் பையால் முகத்தை இறுக்க மூடி ஒரு பொறியியல் கல்லூரி மாணவி சென்னையில் தற்கொலைசெய்து கொண்டார்.
சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் தொழிற்சாலை வைத்திருக்கிறார். இவரது மகள் ஹேமாவதி. 19 வயதானஇவர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
இன்று காலை வெகு நேரமாகியும் ஹேமாவதி எழுந்திருக்கவில்லை. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார்விரைந்து வந்து ஹேமாவதி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அவரது முகம் பிளாஸ்டிக் பையால் இறுக்க மூடப்பட்டிருந்தது. கதவும் உள்பக்கமாக மூடப்பட்டிருந்ததால் ஹேமாவதிதற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆசை படத்தில் பிரகாஷ் ராஜ் தனது மனைவி ரோஹிணியை இதே பாணியில் மூச்சுத் திணறச் செய்து கொலை செய்வார். அதே பாணியில்ஹேமாவதியும் தற்கொலை செய்து கொண்டிருப்பது மந்தைவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications