இது முடிவல்ல, ஆரம்பம்: திருடனின் மிரட்டல்!
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதியான ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க வந்த திருடன், வீட்டில் பொருட்கள் எதுவும்சிக்காததால், மீண்டும் கொள்ளையடிக்க வருவேன் என்று நக்கலாக மிரட்டல் கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளான்.
சேலையூரை அடுத்துள்ள ராஜ கீழ்ப்பாக்கம் அவ்வை சாலையில் குடியிருப்பவர் ராஜ். இவர் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றார். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
உறவினர் வீட்டுக்கு இவர் சென்றிருந்தபோது திருடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான். ஆனால் வீட்டில் திருடக் கூடியஅளவுக்கு எதுவும் இல்லை. நகையோ, பணமோ சிக்கவில்லை.
இதனால் கடுப்பாகிப்போன திருடன், ஒரு பேப்பரை எடுத்து, அதில் இது முடிவல்ல.. ஆரம்பம். மீண்டும் இங்கே கொள்ளையடிக்கவருவேன்.. இங்கே எனது கொள்ளை தொடரும் என்று எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளான்.
இந்த வித்தியாச திருடன் குறித்து சேலையூர் போலீஸார் மண்டையைக் குடைந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications