சச்சினை விட கவாஸ்கரே சிறந்த வீரர்: அக்ரம்
கொல்கத்தா:
சச்சினை விட காவஸ்கருக்கு பந்துவீசுவது சிரமமான வேலை என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமானவாசிம் அக்ரம் கூறினார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது நிருபர்களிடம் அவர்பேசியதாவது:
டெண்டுல்கர், காவஸ்கர் இருவருமே என்னுடைய உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருவரும் சாதாரணமானஆட்டக்காரர்கள் அல்ல. இருப்பினும் சச்சினை விட காவஸ்கரை ஆட்டமிழக்கச் செய்வது அவ்வளவு சுலபமில்லை.
காவஸ்கருக்கு பந்துவீசும்போது எனக்கு 20 வயது. அவரை ஒரே ஒரு முறை ஆட்டமிழக்க செய்துள்ளேன். அதை அவர் இன்றும் நினைவில்வைத்திருக்கிறார்.
1989 தொடருக்குப் பின் சச்சினுக்கு பந்துவீசும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. ஆனால் காவஸ்கரின் உலக சாதனையைமுறியடிக்கும் திறன் அவரிடமே உள்ளது.
அதை நான் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரது சாதனைகளே அதை சொல்லும் என்றார் அக்ரம்.
வங்கதேசத்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் கவாஸ்கரின் சாதனையை (அதிக சதங்கள்) டெண்டுல்கர் சமன் செய்தார்.அதனையடுத்து கவாஸ்கர் அளித்த பேட்டியில், கிடைப்பதற்கரிய கோஹினூர் வைரம் போன்றவர் சச்சின் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications