அப்பு, ரவி குறித்து தகவல் தந்தால் ரூ. 1 லட்சம் பரிசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Appu சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கூலிப்படைத் தலைவன் அப்பு மற்றும் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் பற்றி தகவல்கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று எஸ்.பி. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில்விசாரணைக்கு வரவுள்ள நிலையில் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் இன்று காலைஅவசரமாக டெல்லி சென்றனர்.

அரசுத் தரப்பு வாதங்களை பலப்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை வழக்கறிஞர்களுக்குத் தருவதற்காகவபிரேம்குமார் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அப்பு, ரவி சுப்பிரமணியம் ஆகியோரை ஆந்திரா, பெங்களூர், டெல்லி உள்படபல மாநிலங்களில் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இருப்பினும் அவர்கள் தலைமறைவாக இருக்கும் இடத்தை போலீஸாரால்கண்டுபிடிக்க முடியவில்லை. இந் நிலையில் டெல்லியில் பிரேம்குமார் நிருபர்களிடம் பேசுகையில்,

Ravi அப்பு, ரவி சுப்பிரமணியத்தை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் பதுங்கி இருக்கும் இடம் பற்றி பொது மக்கள்தகவல் கொடுத்தால் ரூ. 1 லட்சம் வரை வெகுமதி வழங்கப்படும்.

காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகம், கண்ட்ரோல் ரூம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். தகவல்கொடுப்பவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+