சிங்கல், வேதாந்தத்துக்கு மூக்குடைப்பு!
சென்னை:
விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்காலையும், வேதாந்தத்தையும் சந்திக்க ஜெயேந்திரர் விரும்பவில்லை என்றும்அதனால்தான் அவர்களை சிறைக்குள் அனுமதிக்கவில்லை என்றும் வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் உயர் நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளார்.
ஜெயேந்திரரை சந்திக்க டிசம்பர் 1ம் தேதி அசோக் சிங்கால் வேலூர் சிறைக்கு வந்தார். அதேபோல தமிழக விஎச்பி தலைவர் வேதாந்தமும்சிறைக்கு வந்தார். ஆனால் இருவரையும் உள்ளே அனுமதிக்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.
இதையடுத்து வேதாந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், சிங்காலும், நானும் ஜெயேந்திரரை சந்திக்கச்சென்றோம். ஆனால் எங்களை உள்ளே அனுமதிக்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.
நாங்கள் ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி வழங்குமாறு சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் அவர்கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு சிறைக் கண்காணிப்பாளர் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், அசோக் சிங்கால் மற்றும் வேதாந்தம் ஆகியஇருவரையும் சந்திக்க ஜெயேந்திரர் விரும்பவில்லை.
அன்றைய தினம் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால், இவர்களைச் சந்தித்தால் தேவையில்லாத பிரச்சினைகள், சர்ச்சைள்எழும் என்று அவர்களை சந்திக்க விரும்பவில்லை என்று எங்களிடம் ஜெயேந்திரர் தெரிவித்துவிட்டார். இதனால்தான் இருவரையும்உள்ளே அனுமதிக்கவில்லை.
மேலும் ஒரு நாளைக்கு 3 பேர் மட்டுமே கைதிகளை சந்திக்க முடியும். ஏற்கனவே ஜெயேந்திரரை காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர்,மட நிர்வாகி நீலகண்டம் மற்றும் ஆடிட்டர் விஜி ஆகியமூன்று பேர் சந்தித்து விட்டதால், சிங்காலுக்கும், வேதாந்தத்திற்கும் அனுமதிஅளிக்கப்படவில்லை.
இதில் சிறை விதிகளின்படியே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதில் அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை.
மேலும் ஜெயேந்திரரை சந்தித்து விட்டு வருபவர்கள் உண்மைக்கு மாறாக பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுப்பதால், தேவையில்லாமல்எனக்கு அவப் பெயர் ஏற்படுகிறது. சிலரைப் பார்க்க ஜெயேந்திரர் விருப்பப்படவில்லை என்றாலும், சிறை அதிகாரிகள்தான் அனுமதிமறுத்து விட்டனர் என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு சிறை நிர்வாகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.
இவர்களைச் சந்திக்கவே ஜெயேந்திரர் விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளதால் அசோக் சிங்கலுக்கும் வேதாந்தத்துக்கும் மூக்குடைப்புஏற்பட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications