ஜெயேந்திரர் வேதனை: பெஜாவர் மடாதிபதி
வேலூர்:
ஜெயேந்திரரை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்று பெஜாவர் மடாதிபதி விஸ்வேச தீர்த்த சுவாமிகள் கூறினார்.
உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேசதீர்த்த சுவாமிகள் ஜெயேந்திரரை வேலூர் சிறையில் சந்தித்தார். பின்னர் நிருபர்களுக்குப்பேட்டியளித்த அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் மனவேதனையில் இருக்கிறார். தனக்காக மக்கள் பிரார்த்தனை செய்யும்படியும், உண்மை விரைவில் வெளிவரும் என்றும்கூறினார்.
ஜெயேந்திதர் மீதான வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்யும். ஜெயேந்திரர் தவறு செய்திருக்க மாட்டார் என என் மனசாட்சி கூறுகிறது.ஜெயேந்திரரை மடத்திலேயே வீட்டுக்காவலில் வைக்கலாம். அவ்வாறு செய்தால் ஜெயேந்திரர் பூஜைகள் செய்ய வசதியாக இருக்கும்.சிறையில் அவருக்கு வசதிகள் இல்லை.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதால் இந்துக்கள் மனம் புண்பட்டுப்போய் இருக்கிறது. ஜெயேந்திரர் தவறை ஒப்புக் கொண்டார் என்றுகூறுவதெல்லாம் பொய் பிரசாரம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications