ராணி மேரி கல்லூரி வழக்கு: ஸ்டாலின் ஆஜர்
சென்னை:
சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவியர் போராட்டத்தின்போது அத்துமீறி கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்ததாக தொடரப்பட்டவழக்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை கடற்கரையில் உள்ள ராணி மேரிக் கல்லூரியை இடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தபோது அதைத் தடுப்பதற்காக கல்லூரிமாணவியர் பெரும் போராட்டத்தில் இறங்கினர்.
அப்போது மாணவியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஸ்டாலின் உள்ளிட்டோர் கல்லூரிக்குள் நுழைந்துமாணவிகளிடம் பேசினர். இதையடுத்து போலீஸ் உத்தரவை மீறி அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்ததாக ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்ட13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
மேலும் இதுதொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்டோர் கைதும் செய்யப்பட்டனர். கைது செய்ய சென்ற போலீஸாரை பணி செய்ய விடாமல்தடுத்ததாகவும் ஸ்டாலின் மீது இன்னொரு வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்குகள் சென்னை சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இன்று இவ்வழக்கு விசாரணைக்குவந்தபோது ஸ்டாலின் உள்ளிட்ட 11பேர் ஆஜராகினர். இருப்பினும், வழக்கு தொடர்புடைய 2 பேர் ஆஜராகவில்லையாதலால், வழக்குவிசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications