கருணாநிதி ராஜினாமா செய்யட்டும்: காளிமுத்து

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

சட்டசபைக்கே வராமல் தவிர்த்து வரும் திமுக தலைவர் கருணாநிதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்வது நல்லது என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.

நாகர்கோவில் வந்த காளிமுத்து அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபைக் கூட்டம்பொங்கலுக்குப் பின்னர் கூடவுள்ளது. ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டம் தொடங்கும்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 4 ஆண்டுகளாக சட்டசபைக்கு வராமல் உள்ளார். இதுதொடர்பானகேள்விகளுக்கு நான் பலமுறை பதிலளித்து விட்டேன். ஏன் வர மாட்டேன் என்கிறார் என்பதை அவரிடம்தான்கேட்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சபைக்கு வராமல் இருக்கக் கூடாது. சபைக்கு வந்து ஜனநாயகக் கடைமையைஆற்ற வேண்டும். அப்படி முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு, வேறு ஒருவரை சபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

சட்டசபையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் போதிய அளவு பேச அனுமதிக்கப்படுகிறது. சபையில் உள்ளஉறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில்தான் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அது தற்போதுகடைப்பிடிக்கப்படுவதில்லை. அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான அளவில் நேரம் ஒதுக்கப்படுகிறது.

நான் எப்போது அமைச்சர் ஆவேன் என்பது எனது கையில் இல்லை. அது முதலமைச்சரின் உரிமை. அவர்தான்அதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் நிதி நிலை சீரான பிறகு எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும்என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+