For Daily Alerts
Just In
மாட்டு பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரின் காவல் நீட்டிப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மாட்டு பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரின் காவலை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து காஞ்சிபுரம்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதாகியுள்ள மாட்டு பாஸ்கர், சில்வஸ்டர் உள்ளிட்ட 8 பேரின் சிறைக் காவலும் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்துஅவர்கள் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது மாட்டு பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரும், தங்களை சிறையில் மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும், வக்கீல்கள், உறவினர்கள் எனயாருமே தங்களை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் நீதிபதியிடம் புகார் கூறினர்.
இது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி உத்தமராஜன், 8 பேரின் காவலையும்வரும் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
Comments
Story first published: Friday, December 17, 2004, 5:30 [IST]