சிறை வாசலில் திடீர் பூஜை நடத்திய புரோகிதர்!
வேலூர்:
சங்கராச்சாரியார் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று வேண்டி புரோகிதர் ஒருவர் வேலூர் சிறை வாசலில் பாராயணமும் பூஜையும்நடத்தினார்.
சங்கராச்சாரியாரை சிறையில் சந்திக்க தென்னிந்திய புரோகிதர்கள் நலச் சங்க நிர்வாகிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதையடுத்து இச் சங்கத்தின் செயலாளர் ஆரணி நரசிம்மன் தனியே வந்து ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி கோரினார். அதற்கும் போலீஸ்அனுமதிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த தேங்காய், பூ, பழத்தை சிறை வாசலில் வைத்து திடீர் பூஜையை ஆரம்பித்தார்நரசிம்மன். பின்னர் 3 முறை நெடுஞ்சானாக விழுந்து கும்பிட்டார்.
பின்னர் சுமார் ஒரு மணி நேரம் விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றை பாராயணம் செய்தார் நரசிம்மன்.
இதைப் பார்த்து கையைப் பிசைந்தபடி நின்றிருந்தனர் போலீசார். தனது பாராயணத்தை முடித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய நரசிம்மன்,சீதைக்கு எப்படி ராமன் இருக்கும் இடம் அயோத்தியோ. அதுபோல ஜெயேந்திரர் இருக்கும் இடமே எனக்குக் கோவில் என்றார்.












Click it and Unblock the Notifications