தூத்துக்குடி:8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் கொலை வழக்கில் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகர் அருகே உள்ளது தேமாங்குளம். இந்த ஊரைச் சேர்ந்த ரவிப்பிரகாஷ் என்பவர் கடந்த 2000மாவதுஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக 4 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு தூத்துக்குடி 2வதுவிரைவு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி பூபாலன் தீர்ப்பு வழங்கினார். 8 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 6 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், மற்ற 7 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+