பிரேம்குமாரை நீக்க ஆளுநடரிம் பாஜக கோரிக்கை
சென்னை:
ஜெயேந்திரர் வழக்கை விசாரித்து வரும் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமாரை விசாரணை அதிகாரி பொறுப்பிலிருந்து மாற்ற உத்தரவிடக்கோரி பாஜக வழக்கறிஞர் பிரிவு ஆளுநர் பர்னாலாவிடம் மனு கொடுத்துள்ளது.
பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் துணைத் தலைவர் குமரகுரு ஆகியோர் பர்னாலாவைச் சந்தித்து மனுஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், ஜெயேந்திரர் உள்ளிட்டோரிடம் நடந்து வரும் விசாரணை குறித்த தகவல்களை பிரேம்குமார் சில குறிப்பிட்டபத்திரிகைகளுக்கு ரகசியமாக கொடுத்து வருகிறார்.
நீதிபதி முன்பு பூட்டப்பட்ட அறையில், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164வது பிரிவின் கீழ் சாட்சிகள், குற்றவாளிகள் ஆகியோர்கொடுக்கும் ரகசிய வாக்குமூலங்கள் கூட சில பத்திரிக்கைகளில் வெளியாகின்றன.
விசாரைணயின்போது போலீஸ் தரப்பில் எடுக்கப்படும் வீடியோ படங்கள் கூட சில பத்திரிக்கைகளில் புகைப்படங்களாகவெளியாகியுள்ளன. பிரேம்குமார் விசாரணையில் எந்தவித நியாயம், நேர்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவர் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டவர் அவர். எனவே அவரைவிசாரணை அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
வேறு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications