விருதுநகரை கலக்கும் மஞ்சள் சேலை சென்டிமெண்ட்!!
விருதுநகர்:
சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை எடுத்துக் கொடுத்தால் வளம் கொழிக்கும் என்ற செய்தி பரவியதால் விருதுநகர் மாவட்டம் முழுவதும்சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை எடுத்துக் கொடுக்கும் வேலையில் சகோதரர்கள் படு பிசியாக இறங்கியுள்ளனர்.
தாரண ஆண்டில் ஏதாவது ஒரு வண்ணத்தில் தங்களது சகோதரிகளுக்கு சேலை கொடுப்பது வழக்கமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புபச்சை நிறத்தில் சேலை எடுத்துக் கொடுத்தால் சகோதரர்களின் வாழ்வில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பரவியது.
தமிழ்நாடு முழுவதும் பரவிய இந்த சென்டிமெண்டால் பச்சை சேலை விற்பனை கன ஜோராக நடந்தது.
இந் நிலையில் இப்போது மஞ்சள் சேலை எடுத்துக் கொடுத்தால் சகோதரர்களின் வாழ்வில் வளம் கொழிக்கும் என்ற தகவல் பரவியுள்ளது.இதையடுத்து தற்போது மாவட்டம் முழுவதும் மஞ்சள் சேலைகளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மஞ்சள் சேலை மட்டுமல்லாது, மஞ்சள் வளையல், மஞ்சள் கயிறு என மஞ்சள் நிறமுள்ள அனைத்து பொருட்களும் படு வேகமாகவிற்பனையாகி வருகின்றன. கடைகளின் முன்பு இங்கு அனைத்து வித மஞ்சள் நிற பொருட்களும் கிடைக்கும் என்று திடீர் போர்டுகளையும்காண முடிகிறது.
விருதுநகர், ராஜபாளையம், கோவில்பட்டி, சாத்தூர் என அக்கம் பக்கத்தில் உள்ள பல ஊர்களிலும் இந்த மஞ்சள் நிற பொருட்களின்விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
மெதுவாக இந்த சென்டிமெண்ட் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.