For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை ஜெயேந்திரரின் சிறைக் காவல் நீடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jayendrarசங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் ஜெயேந்திரரின் சிறைக் காவல் நாளையுடன்முடிவடைவதால் காஞ்சிபுரம் மற்றும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றங்களில் அவரது காவல் வீடியோ கான்பரன்சிங் மூலமேநீட்டிக்கப்படும் என தெரிகிறது.

சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரது சிறைக் காவல் நாளையுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இரு நீதிமன்றங்களிலும் அவர் நாளைஆஜர்படுத்தப்பட வேண்டும்.

இருப்பினும் கடந்த முறையைப் போலவே இம் முறையும் வீடியோ கான்பரன்சிங் மூலமே ஜெயேந்திரரின் சிறைக் காவல் நீட்டிக்கப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி நாளை ஆஜர்?:

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரவி சுப்ரமணியம் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதால் நாளை அவரை காஞ்சிபுரம்நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இநத்ப் பரபரப்பான சூழ்நிலையில் ஜெயேந்திரரை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதை போலீஸார் தவிர்க்க நினைக்கிறார்கள்.இதனால் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜெயேந்திரன் காவல் நீட்டிக்கப்படலாம்.

கதிரவன் சிறைக் காவல் நீட்டிப்பு

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கதிரவன் உள்ளிட்ட 4 பேரின் காவல் ஜனவரி 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் அப்புவின் கூலிப் படையைச் சேர்ந்த கதிரவன், ரஜினி என்ற சின்னா, அனில், அம்பி என்ற அம்பிகாபதி ஆகியோர்கைதாகி சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து 4 பேரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது அவர்களது காவலை ஜனவரி 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X