ராகிங்: பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை
சென்னை:
சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர், மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமை தாங்க முடியாமல்தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி அருகே உள்ளது எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த மோகன் கார்த்திக் என்ற 19வயது மாணவர் முதலாமாண்டு படித்து வந்தார்.
மோகன் கார்த்திக்கை, 3வது ஆண்டு படிக்கும் மாணவர்களான பார்கவ் குமார், வேனு மாதவ ரெட்டி ஆகிய இரண்டு பேரும் ராகிங்செய்துள்ளனர். மோகன் கார்த்திக்கின் அறைக்கு வந்த அவர்கள், ஒரு வாளியில் மோகன் கார்த்திக்கை சிறுநீர் கழிக்கச் சொல்லியுள்ளனர்.பின்னர் அதை தலையில் ஊற்றிக் குளிக்குமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
அதிர்ச்சியிலும், அவமானத்திலும் கூனிக் குறுகிய மோகன் கார்த்திக், இந்த சம்பவம் குறித்து ஆந்திராவில் உள்ள தனது பெற்றோருக்குபோன் செய்து கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகிகளுக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் மாலை கல்லூரியில் விடுதியில் உள்ள தனது அறைக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் மோகன்கார்த்திக். இதைத் தொடர்ந்து கார்த்திக்கின் பெற்றோர் பூந்தமல்லி விரைந்து வந்தனர். மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
கார்த்திக் தற்கொலை செய்து கொள்ள கல்லூரி நிர்வாகமே காரணம். ராகிங் குறித்து புகார் தெரிவித்தும் கல்லூரி நிர்வாகம் உரியநடவடிக்கையை எடுக்கவில்லை என பூந்தமல்லி போலீஸில் கார்த்திக்கின் தந்தை புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாக இயக்குநர் கே.ராமதாஸ் மற்றும் மாணவர் பார்கவ் குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். கல்லூரி முதல்வரும், மற்றொரு மாணவரான வேணுகோபால ரெட்டியும் தலைமறைவாகிவிட்டனர்.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications