ராகிங்: பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை
சென்னை:
சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர், மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமை தாங்க முடியாமல்தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி அருகே உள்ளது எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த மோகன் கார்த்திக் என்ற 19வயது மாணவர் முதலாமாண்டு படித்து வந்தார்.
மோகன் கார்த்திக்கை, 3வது ஆண்டு படிக்கும் மாணவர்களான பார்கவ் குமார், வேனு மாதவ ரெட்டி ஆகிய இரண்டு பேரும் ராகிங்செய்துள்ளனர். மோகன் கார்த்திக்கின் அறைக்கு வந்த அவர்கள், ஒரு வாளியில் மோகன் கார்த்திக்கை சிறுநீர் கழிக்கச் சொல்லியுள்ளனர்.பின்னர் அதை தலையில் ஊற்றிக் குளிக்குமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
அதிர்ச்சியிலும், அவமானத்திலும் கூனிக் குறுகிய மோகன் கார்த்திக், இந்த சம்பவம் குறித்து ஆந்திராவில் உள்ள தனது பெற்றோருக்குபோன் செய்து கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகிகளுக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் மாலை கல்லூரியில் விடுதியில் உள்ள தனது அறைக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் மோகன்கார்த்திக். இதைத் தொடர்ந்து கார்த்திக்கின் பெற்றோர் பூந்தமல்லி விரைந்து வந்தனர். மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
கார்த்திக் தற்கொலை செய்து கொள்ள கல்லூரி நிர்வாகமே காரணம். ராகிங் குறித்து புகார் தெரிவித்தும் கல்லூரி நிர்வாகம் உரியநடவடிக்கையை எடுக்கவில்லை என பூந்தமல்லி போலீஸில் கார்த்திக்கின் தந்தை புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாக இயக்குநர் கே.ராமதாஸ் மற்றும் மாணவர் பார்கவ் குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். கல்லூரி முதல்வரும், மற்றொரு மாணவரான வேணுகோபால ரெட்டியும் தலைமறைவாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications