எங்க மாமா நல்லவர்!
சித்தூர்:
எங்கள் மாமா அப்பு மிகவும் நல்லவர், அவரை போலீஸார் கொலை வழக்கில் சிக்க வைக்கத் துடிப்பது ஏன் என்று புரியவில்லை எனஅப்புவின் அக்காள் பத்மாவின் மகள் நீரஜா கூறியுள்ளார்.
அப்புவின் சொந்த ஊர் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம். இங்குதான் அவரது அக்காள் பத்மா வசித்துவருகிறார். அவரது மகள் நீரஜா, எம்.சி.ஏ பயின்று வரும் மாணவி. தனது தாய்மாமா அப்பு குறித்து நீரஜா கூறியதாவது:
எனது தாய் மாமா அப்பு மிகவும் நல்லவர். அவரது குடும்பத்தினரும் மிகவும் நல்லவர்கள். எங்களது மாமாவுக்கு 2 மகன்கள் உள்ளனர்.ஒருவர் அமெரிக்காவில் உள்ளார், இன்னொருவர் சென்னையில் மாமாவுடன் தங்கியுள்ளார்.
மாமாவின் குடும்பம் மிகவும் உணர்ச்சிவயப்படக் கூடிய தன்மையுடையவர்கள். தப்பு செய்தால் அவர்களுக்குப் பிடிக்காது. மாமா அடிக்கடிஇங்கு வருவார், வரும்போது அத்தையும் (அப்புவின் மனைவி) உடன் வருவார்.
மாமாவுக்கு இங்கு அதிகம் தங்கப் பிடிக்காது. காடு போல இருக்கும் இந்த இடத்தில் நான் தங்க மாட்டேன் என்று கூறி விட்டு வந்தவேகத்தில் சென்று விடுவார். மேலும் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படும் என்பதால் அவருக்கு இங்கு இருக்கவே பிடிக்காது.
மாமாவுக்கு இந்த கொலை வழக்கில் சம்பந்தமே இருக்காது. ஆனால் போலீஸார் ஏன்தான் அவரை இதில் மாட்டி விடத் துடிக்கிறார்கள்என்பது புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் மாமாவின் மூத்த மகனுக்கு நான்தான் போன் செய்து தகவலைக் கூறினேன். அவருக்குஷாக் ஆகி விட்டது.
வழக்கலிருந்து மாமா விடுபட வேண்டும் என்று அவரது குடும்பதிதனர் கோயில் கோயிலாக சென்று வருகின்றனர். போலீஸில்சரணடைவதற்கு முன்பு எங்கள் வீட்டில் மாமா சாப்பிட்டார். அதன் பிறகு ராகு காலம் கழிந்த பிறகு மாமாவை அழைத்துச் செல்லுமாறுபோலீஸைக் கேட்டுக் கொண்டோம். அவர்களும் காத்திருந்து அழைத்துச் சென்றனர்.
மாமாவுக்கு ஒன்றும் ஆகாது என்று எனது அம்மாவிடம் எஸ்.பி. பிரேம்குமார் உறுதி அளித்தார். அதன் பிறகே மாமாவை அழைத்துச் செல்லஅம்மா அனுமதித்தார் என்றார் நீரஜா.
-
குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. இந்த 3 வேலைகளை முடிக்க ஒரே நாள்தான் இருக்கு! தமிழக அரசு அதிரடி -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்!












Click it and Unblock the Notifications