ஓடும் பஸ்ஸில் கொலை
காஞ்சிபுரம்:
அச்சரப்பாக்கம் அருகே உள்ள தின்னலூர் காலனி அதிமுக பிரமுகர் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தின்னலூர் பகுதி அதிமுக கிளைச் செயலாளராக இருந்தவர் ஏழுமலை (58). இவரது மகள் தீபாவை (18) அதே ஊரைச் சேர்ந்த வேதகிரிஎன்பவரின் மகன் விநாயகம் திருமணம் செய்ய விரும்பினார்.
வேதகிரி திமுக உறுப்பினர் என்பதால் அதற்கு ஏழுமலை சம்மதிக்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இந் நிலையில் தீபா, சுந்தரம் செட்டியார் என்பரின் மகன் விஜயனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது வேதகிரி தரப்புக்குகோபத்தை அதிகப்படுத்தியது. இதற்கிடையே ஏழுமலைக்கும் வேதகிரிக்கும் ஒரு நிலம் வாங்குவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
இந் நிலையில் ஏழுமலையும் அவரது மருமகன் விஜயனும் திண்டிவனத்தில் இருந்து தின்னலூர் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறினார்கள்.தின்னலூர் அருகே சென்னேரி கூட்டு ரோடு பகுதியில் பேருந்து வந்தபோது வேதகிரியும் அவருடன் வந்த 5 பேரும் வழிமறித்தனர்.
பேருந்தில் ஏறி ஏழுமலையை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். ஏழுமலையை காப்பாற்ற முயன்ற விஜயனுக்கும் அரிவாள் வெட்டுவிழுந்தது. பின்னர் அக் கும்பல் தப்பிச் சென்றது.
படுகாயத்துடன் விஜயன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
அச்சரப்பாக்கம் போலீஸார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேதகிரி, அவரது மகன் விநாயகம், காளி,முருகன் ஆகிய 4 பேரை போலீஸார் பிடித்து விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications